Friday, 11 April 2014

உலகில் தனிச்சிறப்பு பெற்றவைகளுள் சில

  • உலகின் மிகப்பெரிய சுரங்கப்பாதை ஜப்பான் நாட்டில் உள்ளது. இது கடலுக்கு அடியில் சுமார் 55 கி.மீ நீளத்திற்கு அமைந்துள்ளது.
  • மரகதத் தீவு என்று அழைக்கப்படும் நாடு- அயர்லாந்து.
  • உலகில் மொத்தம் 252 வகையான உருளை கிழங்குகள் பயிரிடப்படுகின்றன.
  •  ஜப்பானில் எரிமலை மரம் எனும் ஒருவகை மரங்கள் உள்ளன. இவை 60 அடி உயரம் வரை வளரக் கூடியவை. சூரியன் மறைந்தபின் உச்சிக் கிளையிலிருந்து வெண்ணிறப் புகையை வெளியிடுவதால் இதனை எரிமலை மரம் என்று அழைக்கின்றனர்.
  •   12 மாதங்கள் சேர்ந்தது ஒரு வருடம் என்பது உலக நடப்பு. ஆனால் 12 மாதக் கணக்கு எத்தியோப்பியாவிற்கு மட்டும் விதி விலக்காக அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒரு வருடத்தை மொத்தம் 13 மாதங்களைக் கொண்டு கணக்கிடுகின்றனர். எத்தியோப்பியாவின் வருடாந்திரக் கணக்குப்படி 30 நாட்களை கொண்ட 12 மாதங்களுடன், 5 நாட்கள் கொண்ட 13வது மாதம் சேர்க்கப்பட்டுள்ளது. லீப் வருடத்தில் 13வது மாதத்திற்கு 6 நாட்கள்.
  •   உலகின் மிகப்பெரிய ரெயில்வே நிலையம்- கிராண்ட் சென்டரல் டெர்மினல், நியூயார்க்
  •  உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது? டென்மார்க்
  • உலகின் மிகப்பெரிய ராட்சத ராட்டினம்- சிங்கப்பூரில் உள்ள மரினா சென்டர் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள சிங்கப்பூர் பிளையர் என்ற ராட்டினம். இதன் விட்டம் 150 மீட்டர் (492 அடி) மற்றும் உயரம் 165 மீட்டர் (541 அடி). மொத்தம் 28 கூண்டுகள். ஒவ்வொரு கூண்டிலும் 28 பேர் சவாரி செய்ய முடியும். இந்த ராட்டினத்தின் உச்சியில் இருந்து பார்த்தால் இதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 45 கி.மீட்டருக்கும் அதிகமான பகுதிகளை காணமுடியும்.
  •  உலகிலேயே மிகப்பெரிய மாளிகை புரூனை நாட்டுத் தலைநகரில் அமைந்துள்ளது. இந்த மாளிகை 20 ஹெக்டேர் பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது. அரண்மனை வீட்டைச் சுற்றி சுமார் 120 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டங்கள் அமைந்துள்ளன. இந்த மாளிகையில் 1788 அறைகள் உள்ளன. இதன் உரிமையாளர் சுல்தான் ஹசானல் ஆவார். இதற்கு அடுத்தப்படியாக 1400 அறைகளுடன் வாடிகன் நகரின் மாளிகை உலகில் இரண்டாவது பெரிய மாளிகையாகும்.
  • உலகிலேயே அதிகமான கோழி பண்ணைகள் உள்ள நகரம்- ஓர் பார்க் (அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ளது)
  • உலகிலேயே அதிகமான பாலங்களை கொண்ட தனிப்பட்ட ஒரே நகரம்- வெனிஸ் நகரம் (450 பாலங்கள்)
  •    உலகிலேயே மிகவும் குள்ளமான பூனை- சியீ (கனடா நாட்டில் சாரா லாங்கீள் என்ற பெண் வளர்த்து வருகிறார். இதன் மொத்த உயரம் 13.5 செ.மீ. முன்சிக்கின் வகையை சேர்ந்த இவ்வகை பூனைகள் மரபணு மாறுதல்களால் குள்ள தன்மையை பெற்றவை)

No comments:

Post a Comment